Friday, April 27, 2012
8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் மெளனம் காக்கும் தமிழக அரசு!
Wednesday, April 25, 2012
மிலிந்த மொரகொட மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா
கொழும்பு மாநகர சபை எதிர்கட்சி தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துகொள்வதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் ஒன்று கூடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, சர்வதேச அமைப்பு ஒன்றின் பதவிக்கு தாம் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவராக தம்மை நியமித்திருந்த ஜனாதிபதிக்கு நன்றியினை தெரிவிப்பதாகவும் மிலிந்த மொறகொட குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, புதிதாக நியமிக்கப்படும் எதிர்க்கட்சி தலைவர் விரும்புமிடத்து அவருக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை எந்நேரமும் வழங்குவதற்குத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தாலும் நகர மக்களின் நலனுக்காக முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் அவ்வாறே முன்னெடுக்கப்படும் என மிலிந்த மொரகொட வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் என்ற வகையில் தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றும்போது மக்களுக்குத் தேவையான உதவி மற்றும் ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகரசபையின் உறுப்பினராக செயற்படுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை கௌரவமாகும் என குறிப்பிட்டுள்ள மிலிந்த மொரகொட, மாநகர சபைக்குள் வலுவான அணியொன்றை உருவாக்க கடந்த ஆறு மாதங்களாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக கூறியுள்ளார்.
இதன் பெறுபேறாக கொழும்பு மாநகர சபையின் மிகவும் முக்கிய செயற்குழுவான நிதி செயற்குழுவின் தீர்மானமொன்றை வெற்றிகொள்ளும் வாய்ப்பு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலைமையிலான அணிக்கு கிடைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, சர்வதேச அமைப்பு ஒன்றின் பதவிக்கு தாம் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவராக தம்மை நியமித்திருந்த ஜனாதிபதிக்கு நன்றியினை தெரிவிப்பதாகவும் மிலிந்த மொறகொட குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, புதிதாக நியமிக்கப்படும் எதிர்க்கட்சி தலைவர் விரும்புமிடத்து அவருக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை எந்நேரமும் வழங்குவதற்குத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாம் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தாலும் நகர மக்களின் நலனுக்காக முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் அவ்வாறே முன்னெடுக்கப்படும் என மிலிந்த மொரகொட வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் என்ற வகையில் தமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை நிறைவேற்றும்போது மக்களுக்குத் தேவையான உதவி மற்றும் ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகரசபையின் உறுப்பினராக செயற்படுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை கௌரவமாகும் என குறிப்பிட்டுள்ள மிலிந்த மொரகொட, மாநகர சபைக்குள் வலுவான அணியொன்றை உருவாக்க கடந்த ஆறு மாதங்களாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாக கூறியுள்ளார்.
இதன் பெறுபேறாக கொழும்பு மாநகர சபையின் மிகவும் முக்கிய செயற்குழுவான நிதி செயற்குழுவின் தீர்மானமொன்றை வெற்றிகொள்ளும் வாய்ப்பு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலைமையிலான அணிக்கு கிடைத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மர்மப் பொருள் வெடித்ததில் சகோதரர் இருவர் உடல் சிதறிப் பலி: கிளிநொச்சியில் சம்பவம்
கிளிநொச்சி பளை- முல்லையடி பகுதியில் மர்மப் பொருள் ஒன்றை அடித்து விளையாடிய சகோதரர்கள் இருவர் உடல் சிதறிப் பலியான சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
நகரத்தை அண்டியுள்ள இந்தப் பகுதியில் வீட்டு வளவினுள் மர்மப் பொருள் ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்து வந்த மு. தமிழ்மாறன்(வயது4), மு. தனோஜன்(வயது2) ஆகிய சிறுவர்கள் இருவரும் அதனை கத்தியினால் வெட்டியும், அடித்தும் உள்ளனர், இதன் போது மிகப் பாரியளவு சத்தத்துடன் அது வெடித்துள்ளது.
இதில் சிறுவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே படுபயங்கரமாக முறையில் உயிரிழந்துள்ளார், மற்றய சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் பளை பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
இதே வேளை, குறித்த சிறுவர்களின் தாய், ஒரு முன்பள்ளி ஆசிரியை எனவும், தந்தை ஒரு கூலித் தொழிலாளி எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இவர்கள் இருவருக்கும் இந்த இரு பிள்ளைகளே உள்ளனர் என்பதும் சோகமான விடயம்.
நகரத்தை அண்டியுள்ள இந்தப் பகுதியில் வீட்டு வளவினுள் மர்மப் பொருள் ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்து வந்த மு. தமிழ்மாறன்(வயது4), மு. தனோஜன்(வயது2) ஆகிய சிறுவர்கள் இருவரும் அதனை கத்தியினால் வெட்டியும், அடித்தும் உள்ளனர், இதன் போது மிகப் பாரியளவு சத்தத்துடன் அது வெடித்துள்ளது.
இதில் சிறுவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே படுபயங்கரமாக முறையில் உயிரிழந்துள்ளார், மற்றய சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் பளை பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
இதே வேளை, குறித்த சிறுவர்களின் தாய், ஒரு முன்பள்ளி ஆசிரியை எனவும், தந்தை ஒரு கூலித் தொழிலாளி எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இவர்கள் இருவருக்கும் இந்த இரு பிள்ளைகளே உள்ளனர் என்பதும் சோகமான விடயம்.
தம்புள்ள நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது
தம்புள்ள பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆரியரத்ன எதுகல விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தம்புள்ளயில் புண்ணிய பூமியாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசம், விரிவாக்கல் திட்டத்தின் கீழ் மிக குறுகிய காலத்தில் மேம்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், தம்புள்ள பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பாக ஜனாதிபதி உள்ளிட்ட அரச தரப்பினரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பு போன்றே அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்றவகையில், நீண்டகாலமாக நாட்டில் நிலவிவரும் சம்பிரதாயங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய இனத்தவரையும் மதிக்கும் வகையிலேயே இவ்வாறு செயற்படுவது அவசியம் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்கையில், நாட்டு மக்களிடையே, பிரிவினைவாத குழுக்கள் அல்லது சர்வதேச அழுத்தம், சூழ்ச்சி அல்லது வேறு செயற்பாடுகள் ஊடாக குழப்பநிலையை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் அது தொடர்பாக சரியான தீர்மானங்களை எடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். இதில் கருத்து வெளியிட்ட அவர், நெருக்கடியை நிவர்த்திக்கும் பொருட்டு ஜனாதிபதியும் தமக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
இதனிடையே, தம்புள்ளையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சியம் மகா நிகாயவின், ரன்கிரி தம்புள்ள விகாரையைச் சார்ந்த ஸ்ரீ சுமங்கல தேரர் கருத்து வெளியிடுகையில். அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் பொதுமக்களிடன் மன்னிப்பு கோரவேண்டும் என தெரிவித்தார்.
எனினும், தவறுகள் இருப்பின் மன்னிப்பு கோருவதற்கு தயாராக இருப்பதாகவும், தம்மால் அவ்வாறான பிழைகள் எதுவும் இழைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில், தம்புள்ளையில் ஏற்பட்ட நிலைமைகள் தொடர்பில் முஸ்லிம் அமைப்புகளின் ஒன்றியம் தமது நிலைப்பாடுகளை வெளியிடுவதற்கு இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தம்புள்ளை சம்பவம் தொடர்பில் எதிர்ப்பு வெளியிடும் நோக்கில் அரசாங்கத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தமது பதவிகளிலிருந்து விலக வேண்டும் என தெரிவித்தார்.
அத்துடன், பள்ளிவாசல் மீது தாக்கல் மேற்கொண்டவர்களை கைது செய்வதற்கு அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்
தம்புள்ளயில் புண்ணிய பூமியாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதேசம், விரிவாக்கல் திட்டத்தின் கீழ் மிக குறுகிய காலத்தில் மேம்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், தம்புள்ள பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பாக ஜனாதிபதி உள்ளிட்ட அரச தரப்பினரின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பு போன்றே அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்றவகையில், நீண்டகாலமாக நாட்டில் நிலவிவரும் சம்பிரதாயங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய இனத்தவரையும் மதிக்கும் வகையிலேயே இவ்வாறு செயற்படுவது அவசியம் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்கையில், நாட்டு மக்களிடையே, பிரிவினைவாத குழுக்கள் அல்லது சர்வதேச அழுத்தம், சூழ்ச்சி அல்லது வேறு செயற்பாடுகள் ஊடாக குழப்பநிலையை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் அது தொடர்பாக சரியான தீர்மானங்களை எடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். இதில் கருத்து வெளியிட்ட அவர், நெருக்கடியை நிவர்த்திக்கும் பொருட்டு ஜனாதிபதியும் தமக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
இதனிடையே, தம்புள்ளையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சியம் மகா நிகாயவின், ரன்கிரி தம்புள்ள விகாரையைச் சார்ந்த ஸ்ரீ சுமங்கல தேரர் கருத்து வெளியிடுகையில். அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் பொதுமக்களிடன் மன்னிப்பு கோரவேண்டும் என தெரிவித்தார்.
எனினும், தவறுகள் இருப்பின் மன்னிப்பு கோருவதற்கு தயாராக இருப்பதாகவும், தம்மால் அவ்வாறான பிழைகள் எதுவும் இழைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில், தம்புள்ளையில் ஏற்பட்ட நிலைமைகள் தொடர்பில் முஸ்லிம் அமைப்புகளின் ஒன்றியம் தமது நிலைப்பாடுகளை வெளியிடுவதற்கு இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய தேசிய கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தம்புள்ளை சம்பவம் தொடர்பில் எதிர்ப்பு வெளியிடும் நோக்கில் அரசாங்கத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தமது பதவிகளிலிருந்து விலக வேண்டும் என தெரிவித்தார்.
அத்துடன், பள்ளிவாசல் மீது தாக்கல் மேற்கொண்டவர்களை கைது செய்வதற்கு அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்
இலங்கையின் சனத்தொகை 2 கோடிக்கும் அதிகம்: புதிய சனத்தொகை கணிப்பீடு
இலங்கையின் சனத்தொகை தற்போது 2 கோடியை கடந்துள்ளதாக, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இதேவேளை இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி வேகம் குறைவடைந்து வருகின்றமையை அவதானிக்க முடிவதாக, சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இதற்கு முன்னர் நாடு முழுவதும் கடந்த 1981ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த காலப்பகுதியில் இலங்கையின் சனத்தொகை ஒருகோடியே நாற்பத்து எட்டு லட்சமாக காணப்பட்டது.
2001ஆம் ஆண்டு இலங்கையில் சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட போதும், யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதனை மேற்கொள்ள முடியாதிருந்தது.
எவ்வாறாயினும், மாவட்ட அரசாங்க அதிபர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், அந்த காலப்பகுதியில் ஒருகோடியே 78 லட்சமாக சனத்தொகை காணப்பட்டது.
எனினும், தற்போது யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கையின் வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில், இலங்கையின் சனத்தொகை இரண்டு கோடியே இரண்டு லட்சத்தை அண்மித்துள்ளதாக தெரியவந்துள்ளது
இலங்கையில் இதற்கு முன்னர் நாடு முழுவதும் கடந்த 1981ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த காலப்பகுதியில் இலங்கையின் சனத்தொகை ஒருகோடியே நாற்பத்து எட்டு லட்சமாக காணப்பட்டது.
2001ஆம் ஆண்டு இலங்கையில் சனத்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்ட போதும், யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதனை மேற்கொள்ள முடியாதிருந்தது.
எவ்வாறாயினும், மாவட்ட அரசாங்க அதிபர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், அந்த காலப்பகுதியில் ஒருகோடியே 78 லட்சமாக சனத்தொகை காணப்பட்டது.
எனினும், தற்போது யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கையின் வடக்கு கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில், இலங்கையின் சனத்தொகை இரண்டு கோடியே இரண்டு லட்சத்தை அண்மித்துள்ளதாக தெரியவந்துள்ளது
Monday, April 16, 2012
பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களை சந்திக்க அனுமதி வேண்டும் - இலங்கை சென்ற இந்திய குழு கோரிக்கை
இலங்கையில் இந்தியா உதவியுடன் நடக்கும் சீரமைப்பு பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை பார்வையிடுவது முக்கியம் அல்ல. முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களை சந்திப்பதே முக்கியம். அதற்காக வற்புறுத்தியுள்ளோம் என்றார் பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ்.
இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது, இலட்சக்கணக்கான அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். போரின் போதும், போருக்கு பிறகும் ஈழத் தமிழர்களிடம் ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடந்தன. இதில் அவர்களது வாழ்வாதாரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.
முகாம்களில் அடைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். போர் முடிந்ததும் ஈழத்தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான உரிமைகள் பெற்றுத் தருவோம் என்று கூறிய மத்திய காங்கிரஸ் அரசு தற்போது மவுனமாக உள்ளது.
இந்தியா உள்பட பல நாடுகளிடம் உதவி பெறும் இலங்கை அரசு அதை தமிழர் பகுதியில் சிங்கள மயமாக்கலுக்கே பயன்படுத்தி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்ததால், இலங்கையில் நடந்து வரும் சீரமைப்புப் பணிகளை பார்வையிட அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி ஆய்வு செய்ய முடிவு செய்தது.
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 16 எம்.பி.க்கள் இந்த குழுவுக்காக தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் இருந்து அ.தி. மு.க. சார்பில் ரபிபெர்னாட், தி.மு.க. சார்பில் இளங்கோவன், காங்கிரஸ் சார்பில் என்.எஸ்.வி.சித்தன், சுதர்சன நாச்சியப்பன், மாணிக்கம் தாகூர், கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் எம்.பி.க்கள் குழு பயணம் வெறும் கண்துடைப்பு நாடகம் என்று புகார்கள் எழுந்தன. இதையடுத்து இலங்கை செல்லும் குழுவில் இருந்து அ.தி. மு.க. விலகியது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ராஜபக்சேயுடன் எம்.பி.க்கள் விருந்து சாப்பிட மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருடன் எந்த விவாதத்துக்கும் ஏற்பாடு செய்யாததால் அ.தி.மு.க. குழுவில் இடம் பெறாது என்று கூறியிருந்தார்.
தற்போது தி.மு.க.வும் எம்.பி.க்கள் குழுவில் இருந்து விலகிவிட்டது. ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதில் முதன்மையாக உள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் விலகிவிட்ட நிலையில், அந்த குழுவில் 14 எம்.பி.க்களே உள்ளனர்.
இவர்கள் இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு இலங்கை செல்கிறார்கள். அவர்களிடம் நேற்று மத்திய வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் பயணத் திட்டம் பற்றிய நிகழ்ச்சி நிரல்களை விளக்கி கூறினார்.
எம்.பி.க்கள் குழுவினர் ராஜபக்சே, பசில் ராஜபக்சே, பிரீஸ், ரணில் விக்கிரமசிங்கே பிள்ளையான் உள்பட சிலரை சந்தித்து பேசுவது பற்றி தெரிவிக்கப்பட்டது. 21-ந் தேதி ராஜபக்சேயுடன் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பற்றியும் கூட்டத்தில் கூறப்பட்டது. இதற்கு எம்.பி.க்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
தி.மு.க., அ.தி.மு.க. விலகிவிட்ட நிலையில், ராஜபக்சேயுடன் சிற்றுண்டி சாப்பிடும் விருந்து நிகழ்ச்சியை மாற்றவேண்டும் என்று குழுவில் இடம் பெற்றுள்ள தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கூறினார்கள்.
ராஜபக்சேயுடன் 21-ந் தேதி காலை சாப்பிடுவதற்கு பதில் 20-ந் தேதி மாலை அவரை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுபோல 18-ந் தேதி இலங்கை ரெயில்வே திட்டப்பணிகளை பார்வையிட பயணத் திட்டத்தில் நிகழ்ச்சி சேர்க்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு மாணிக்கன் தோட்ட முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களை சந்தித்துபேச அனுமதிக்க வேண்டும் என்றும் எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள்
முகாம்களில் அடைக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள். போர் முடிந்ததும் ஈழத்தமிழர்களுக்கு சிங்களர்களுக்கு இணையான உரிமைகள் பெற்றுத் தருவோம் என்று கூறிய மத்திய காங்கிரஸ் அரசு தற்போது மவுனமாக உள்ளது.
இந்தியா உள்பட பல நாடுகளிடம் உதவி பெறும் இலங்கை அரசு அதை தமிழர் பகுதியில் சிங்கள மயமாக்கலுக்கே பயன்படுத்தி வருகிறது. இது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்ததால், இலங்கையில் நடந்து வரும் சீரமைப்புப் பணிகளை பார்வையிட அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி ஆய்வு செய்ய முடிவு செய்தது.
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 16 எம்.பி.க்கள் இந்த குழுவுக்காக தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் இருந்து அ.தி. மு.க. சார்பில் ரபிபெர்னாட், தி.மு.க. சார்பில் இளங்கோவன், காங்கிரஸ் சார்பில் என்.எஸ்.வி.சித்தன், சுதர்சன நாச்சியப்பன், மாணிக்கம் தாகூர், கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் எம்.பி.க்கள் குழு பயணம் வெறும் கண்துடைப்பு நாடகம் என்று புகார்கள் எழுந்தன. இதையடுத்து இலங்கை செல்லும் குழுவில் இருந்து அ.தி. மு.க. விலகியது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ராஜபக்சேயுடன் எம்.பி.க்கள் விருந்து சாப்பிட மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருடன் எந்த விவாதத்துக்கும் ஏற்பாடு செய்யாததால் அ.தி.மு.க. குழுவில் இடம் பெறாது என்று கூறியிருந்தார்.
தற்போது தி.மு.க.வும் எம்.பி.க்கள் குழுவில் இருந்து விலகிவிட்டது. ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதில் முதன்மையாக உள்ள தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் விலகிவிட்ட நிலையில், அந்த குழுவில் 14 எம்.பி.க்களே உள்ளனர்.
இவர்கள் இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு இலங்கை செல்கிறார்கள். அவர்களிடம் நேற்று மத்திய வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மத்தாய் பயணத் திட்டம் பற்றிய நிகழ்ச்சி நிரல்களை விளக்கி கூறினார்.
எம்.பி.க்கள் குழுவினர் ராஜபக்சே, பசில் ராஜபக்சே, பிரீஸ், ரணில் விக்கிரமசிங்கே பிள்ளையான் உள்பட சிலரை சந்தித்து பேசுவது பற்றி தெரிவிக்கப்பட்டது. 21-ந் தேதி ராஜபக்சேயுடன் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பற்றியும் கூட்டத்தில் கூறப்பட்டது. இதற்கு எம்.பி.க்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
தி.மு.க., அ.தி.மு.க. விலகிவிட்ட நிலையில், ராஜபக்சேயுடன் சிற்றுண்டி சாப்பிடும் விருந்து நிகழ்ச்சியை மாற்றவேண்டும் என்று குழுவில் இடம் பெற்றுள்ள தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கூறினார்கள்.
ராஜபக்சேயுடன் 21-ந் தேதி காலை சாப்பிடுவதற்கு பதில் 20-ந் தேதி மாலை அவரை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுபோல 18-ந் தேதி இலங்கை ரெயில்வே திட்டப்பணிகளை பார்வையிட பயணத் திட்டத்தில் நிகழ்ச்சி சேர்க்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு மாணிக்கன் தோட்ட முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்களை சந்தித்துபேச அனுமதிக்க வேண்டும் என்றும் எம்.பி.க்கள் வலியுறுத்தினார்கள்
இலங்கை தமிழர்கள் மீது திமுகவுக்கு துளியளவும் அக்கறை இல்லை
நாடாளுமன்றத்தில் கட்சிகளின் எம்பிக்களின் எண்ணிக்கை அடிப்படையில் இலங்கை செல்லும் எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரோ, திருமாவளவனோ இக் குழுவில் இடம் பெறமுடியவில்லை என்றும் பிரதமர் அலுவலகத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி கூறினார்.
திருமாவளவன் இந்தக் குழுவில் இடம் பெறுவதை இலங்கை அரசு விரும்பவில்லை. இதனால் தான் அவரை இதில் சேர்க்காமல் விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந் நிலையில் காரைக்காலில் நிருபர்களிடம் பேசிய நாராயணசாமி,
இலங்கைக்கு இந்திய எம்.பிக்கள் குழு செல்கிறது. இவர்கள் அங்கு செல்வதன் மூலம் அங்குள்ள தமிழர்கள் போருக்குப் பிறகு உள்ள நிலையை தெரிந்து கொள்ள முடியும். இந்தக் குழு அங்கு செல்வதால் இந்திய அரசு, இலங்கைத் தமிழர்களுக்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் அந்தந்த கட்சிகளின் எம்.பிக்களின் எண்ணிக்கை அடிப்படையில் இலங்கை செல்லும் எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரோ, திருமாவளவன் ஆகியோர் இலங்கை செல்லும் குழுவில் இடம் பெற முடியவில்லை என்றார் நாராயணசாமி.
இந் நிலையில் நாராயணசாமி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
டெல்லியில் இருந்து இலங்கைக்குச் செல்லும் நல்லெண்ண குழுவில் திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. செல்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இளங்கோவனும் இந்த பயணம் இலங்கை வாழ் தமிழர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
ஆனால் கடைசி நேரத்தில் இலங்கை செல்லும் குழுவில் இருந்து திமுக இடம்பெறாது என்று அறிவித்தது வருத்தம் அளிக்கிறது. இந்த செயல் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் மீது அவர்கள் அக்கறை கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.
மத்திய அரசு நல்லெண்ண குழுவை இலங்கைக்கு அனுப்புவதன் மூலம் இந்தியா-இலங்கை நல்லுறவை நீடிப்பதோடு உலகில் பல்வேறு நாடுகளின் ஆதரவையும் இதன் மூலம் பெறுகிறது.
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மின்சாரம், வீட்டு வசதி, உணவு, உடை உள்ளிட்ட வாழ்வாதரத்திற்காக இந்தியா உதவி செய்வதன் மூலம் அண்டை நாடுகளின் உதவி இலங்கைக்கு கிடைக்கப்பெறாமல் தடுக்கும் ராஜதந்திர வழிமுறையாகும்
இந் நிலையில் காரைக்காலில் நிருபர்களிடம் பேசிய நாராயணசாமி,
இலங்கைக்கு இந்திய எம்.பிக்கள் குழு செல்கிறது. இவர்கள் அங்கு செல்வதன் மூலம் அங்குள்ள தமிழர்கள் போருக்குப் பிறகு உள்ள நிலையை தெரிந்து கொள்ள முடியும். இந்தக் குழு அங்கு செல்வதால் இந்திய அரசு, இலங்கைத் தமிழர்களுக்கு எப்போதும் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் அந்தந்த கட்சிகளின் எம்.பிக்களின் எண்ணிக்கை அடிப்படையில் இலங்கை செல்லும் எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரோ, திருமாவளவன் ஆகியோர் இலங்கை செல்லும் குழுவில் இடம் பெற முடியவில்லை என்றார் நாராயணசாமி.
இந் நிலையில் நாராயணசாமி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
டெல்லியில் இருந்து இலங்கைக்குச் செல்லும் நல்லெண்ண குழுவில் திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. செல்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இளங்கோவனும் இந்த பயணம் இலங்கை வாழ் தமிழர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
ஆனால் கடைசி நேரத்தில் இலங்கை செல்லும் குழுவில் இருந்து திமுக இடம்பெறாது என்று அறிவித்தது வருத்தம் அளிக்கிறது. இந்த செயல் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் மீது அவர்கள் அக்கறை கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.
மத்திய அரசு நல்லெண்ண குழுவை இலங்கைக்கு அனுப்புவதன் மூலம் இந்தியா-இலங்கை நல்லுறவை நீடிப்பதோடு உலகில் பல்வேறு நாடுகளின் ஆதரவையும் இதன் மூலம் பெறுகிறது.
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மின்சாரம், வீட்டு வசதி, உணவு, உடை உள்ளிட்ட வாழ்வாதரத்திற்காக இந்தியா உதவி செய்வதன் மூலம் அண்டை நாடுகளின் உதவி இலங்கைக்கு கிடைக்கப்பெறாமல் தடுக்கும் ராஜதந்திர வழிமுறையாகும்
இலங்கை பிரச்சினையில் மூக்கை நுழைத்து அரசியல் ஆட்டம் ஆடும் ஜெயலலிதா - தேசப்பற்றுள்ள இயக்கம் குற்றச்சாட்டு
இலங்கை விவகாரத்தைக் களமாகப் பயன்படுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசியல் ஆட்டம் ஆடுகின்றார் எனக் குற்றஞ்சாட்டியுள்ள தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் இலங்கைப் பயணம் பயனுள்ளதாக அமையவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை இந்திய உறவைப் புதுப்பிக்கும் முனைப்புடனேயே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கொழும்பு வந்துள்ளது. மாறாகத் தமிழர்கள் மீதுள்ள பாசம் காரணமாக அல்ல என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ பயண்மொன்றை மேற்கொண்டு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று இலங்கை வந்துள்ளது. இந்தக் குழுவில் தமது கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கமாட்டார்கள் என தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் அறிவித்துள்ளனர் இவர்களின் இந்த அறிவிப்புக் குறித்தும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் இலங்கைப் பயணம் தொடர்பிலும் கருத்து வெளியிடும் போதே தேசப் பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஊடகச் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு:
இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை மீறியே எமக்கு எதிராக ஜெனிவாவில் செயற்பட்டது. இந்தியா இவ்வாறு செயற்படவேண்டும் என உறுதியாக அழுத்தம் கொடுத்தவர் ஜெயலலிதாதான். மத்திய அரசை எமக்கு எதிராகத் திருப்பிவிட்டதன் பின்னணியில் இவரே நின்று செயற்பட்டார். இவையெல்லாம் அரசியல் ஆட்டமாகும்.
இலங்கை வரும் இந்திய எம்.பிக்கள் குழுவில் தனது கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்கினால் அது தனது கௌரவத்துக்கு மதிப்புக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் என்ற காரணத்தைக் கருத்திற்கொண்டே தனது கட்சி எம்.பிக்களைத் தமிழக முதல்வர் தடுத்துள்ளார்.
ஜெனிவா விவகாரத்தால் விரிசல் அடைந்தது எனக் கூறப்படும் இலங்கை இந்திய உறவைப் புதுப்பிக்கும் நோக்கிலேயே டில்லி எம்.பிக்கள் குழு இங்கு வருகின்றது. தமிழர்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி இந்த விஜயம் அமையவில்லை.
இலங்கையில் தமிழர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசுக்கு இந்தியா உதவவேண்டும். அப்படி இல்லையேல் அழுத்தம் கொடுக்கவேண்டும். மாறாக அரசியல் ஆட்டம் ஆடக்கூடாது என்றார்
உத்தியோகபூர்வ பயண்மொன்றை மேற்கொண்டு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று இலங்கை வந்துள்ளது. இந்தக் குழுவில் தமது கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கமாட்டார்கள் என தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் அறிவித்துள்ளனர் இவர்களின் இந்த அறிவிப்புக் குறித்தும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் இலங்கைப் பயணம் தொடர்பிலும் கருத்து வெளியிடும் போதே தேசப் பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஊடகச் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு:
இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையை மீறியே எமக்கு எதிராக ஜெனிவாவில் செயற்பட்டது. இந்தியா இவ்வாறு செயற்படவேண்டும் என உறுதியாக அழுத்தம் கொடுத்தவர் ஜெயலலிதாதான். மத்திய அரசை எமக்கு எதிராகத் திருப்பிவிட்டதன் பின்னணியில் இவரே நின்று செயற்பட்டார். இவையெல்லாம் அரசியல் ஆட்டமாகும்.
இலங்கை வரும் இந்திய எம்.பிக்கள் குழுவில் தனது கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்கினால் அது தனது கௌரவத்துக்கு மதிப்புக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் என்ற காரணத்தைக் கருத்திற்கொண்டே தனது கட்சி எம்.பிக்களைத் தமிழக முதல்வர் தடுத்துள்ளார்.
ஜெனிவா விவகாரத்தால் விரிசல் அடைந்தது எனக் கூறப்படும் இலங்கை இந்திய உறவைப் புதுப்பிக்கும் நோக்கிலேயே டில்லி எம்.பிக்கள் குழு இங்கு வருகின்றது. தமிழர்களின் பிரச்சினைகளை மையப்படுத்தி இந்த விஜயம் அமையவில்லை.
இலங்கையில் தமிழர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசுக்கு இந்தியா உதவவேண்டும். அப்படி இல்லையேல் அழுத்தம் கொடுக்கவேண்டும். மாறாக அரசியல் ஆட்டம் ஆடக்கூடாது என்றார்
பேரினவாதிகளின் நீலிக் கண்ணீரை தமிழ் மக்கள் நன்கறிவர் - சரவணபவன் பா.உ.
ஆட்சிக்கு வரும் எந்தவொரு சிங்கள அரசியல்வாதியும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நல்லிணக்க சமிக்ஞைகளை வெளிப்படுத்துவதில்லை என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவான் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இதய சுத்தியுடன் இனப்பிரச்சினையைத் தீர்க்க ஆட்சியில் இருக்கும் போது முயல்வதே இல்லை. எனினும் அதன் பின்னர் பதவி போனதும் சுடலை ஞானம் பெற்றவர்கள் போல தமிழர் பிரச்சினை தொடர்பாக அக்கறை கொள்வது போல கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள்.
ஆனால் கடைசிவரையும் உருப்படியான எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ளவே மாட்டார்கள். பேரினவாதிகளின் இத்தகைய கபட நாடகங்களை இனங்கண்டு, எமது அரசியல் தீர்வை நாமே தீர்மானிக்க வேண்டும்.
வட்டுக்கோட்டை கலைநகர் விளையாட்டுக்கழகத்தின் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தமிழர் பக்க நியாயங்களை வெளிப்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டுள்ளார். இவற்றை ஒரு புறம் வரவேற்றாலும் இன்னொரு புறத்தில் இந்தக் கருத்தின் உண்மைத் தன்மை குறித்து கேள்வியும் எழுகின்றது. சந்திரிகா ஜனாதிபதியாக பதவி வகித்த போது இனப் பிரச்சினையைத் தீர்க்க இதய சுத்தியோடு முன்வரவில்லை. மாறாக தமிழர் தாயகத்தில் கொடும் போரையே ஏவிவிட்டார்.
அதற்குப் பின் ரணில் பிரதமர் ஆனவுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான நடவடிக்கைகளையும் குழப்புவதிலேயே சந்திரிகா குறியாக இருந்தார். இப்போது தமிழர்களின் பிரச்சினை பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
சந்திரிகா மட்டுமல்ல, எந்தவொரு பேரினவாத அரசியல்வாதியும் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க மனதார விரும்புவதில்லை. இதனை தமிழ் மக்களும் நன்குணர்ந்துள்ளனர்.
இப்போது களநிலைமை நமக்கு சாதகமாக மாறியுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் சர்வதேசத்தின் ஆதரவு தமிழருக்கு இருப்பதை வெளிக்காட்டுகிறது. தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த 24 நாடுகளையும் தன் பக்கம் இழுக்க இலங்கை அரசு படாதபாடு படுகிறது. ஏனெனில் இலங்கைக்கு எதிரான இன்னொரு தீர்மானம் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வர முயற்சிகள் நடைபெறுகின்றன.
இதன் போது தனக்கு எதிரான முடிவு வரக் கூடாது என்பதற்காகவே இந்த முயற்சியில் இலங்கை இறங்கியுள்ளது. அந்த முயற்சியின் ஒரு நடவடிக்கையாகவே இந்தியக்குழுவை இலங்கை வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவை இதன் மூலம் தன் பக்கம் இழுக்கலாம் என அரசு நம்புகின்றது.
இத்தகைய வீணான முயற்சிகளை விடுத்து தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வை வழங்க அரசு முன்வந்தால் சர்வதேசத்திற்கு பயப்படும் நிலைமை மாறிவிடும். என்றார்
ஆனால் கடைசிவரையும் உருப்படியான எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ளவே மாட்டார்கள். பேரினவாதிகளின் இத்தகைய கபட நாடகங்களை இனங்கண்டு, எமது அரசியல் தீர்வை நாமே தீர்மானிக்க வேண்டும்.
வட்டுக்கோட்டை கலைநகர் விளையாட்டுக்கழகத்தின் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தமிழர் பக்க நியாயங்களை வெளிப்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்டுள்ளார். இவற்றை ஒரு புறம் வரவேற்றாலும் இன்னொரு புறத்தில் இந்தக் கருத்தின் உண்மைத் தன்மை குறித்து கேள்வியும் எழுகின்றது. சந்திரிகா ஜனாதிபதியாக பதவி வகித்த போது இனப் பிரச்சினையைத் தீர்க்க இதய சுத்தியோடு முன்வரவில்லை. மாறாக தமிழர் தாயகத்தில் கொடும் போரையே ஏவிவிட்டார்.
அதற்குப் பின் ரணில் பிரதமர் ஆனவுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான நடவடிக்கைகளையும் குழப்புவதிலேயே சந்திரிகா குறியாக இருந்தார். இப்போது தமிழர்களின் பிரச்சினை பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
சந்திரிகா மட்டுமல்ல, எந்தவொரு பேரினவாத அரசியல்வாதியும் தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க மனதார விரும்புவதில்லை. இதனை தமிழ் மக்களும் நன்குணர்ந்துள்ளனர்.
இப்போது களநிலைமை நமக்கு சாதகமாக மாறியுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் சர்வதேசத்தின் ஆதரவு தமிழருக்கு இருப்பதை வெளிக்காட்டுகிறது. தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த 24 நாடுகளையும் தன் பக்கம் இழுக்க இலங்கை அரசு படாதபாடு படுகிறது. ஏனெனில் இலங்கைக்கு எதிரான இன்னொரு தீர்மானம் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வர முயற்சிகள் நடைபெறுகின்றன.
இதன் போது தனக்கு எதிரான முடிவு வரக் கூடாது என்பதற்காகவே இந்த முயற்சியில் இலங்கை இறங்கியுள்ளது. அந்த முயற்சியின் ஒரு நடவடிக்கையாகவே இந்தியக்குழுவை இலங்கை வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவை இதன் மூலம் தன் பக்கம் இழுக்கலாம் என அரசு நம்புகின்றது.
இத்தகைய வீணான முயற்சிகளை விடுத்து தமிழ் மக்களுக்கு நிரந்தரத் தீர்வை வழங்க அரசு முன்வந்தால் சர்வதேசத்திற்கு பயப்படும் நிலைமை மாறிவிடும். என்றார்
தமிழர்கள் பிரச்சினை, பெருபான்மை சிங்கள மக்களுக்கு தெரியாது! தீர்வினை வழங்க அவர்கள் தடையில்லை: சந்திரிக்கா தெரிவிப்பு
தமிழர்களுக்கு தீர்வினை வழங்குவது தொடர்பில் பெரும்பான்மையான சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை சிங்கள மக்கள் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் மிகவும் பிழையானவை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதுவரையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் பெரும்பான்மையான சிஙகள மக்களுக்கு தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் லாப நோக்கங்களுக்காக இனப்பிரச்சினையை அரசியல்வாதிகள் தூண்டி விடுவதாகவும், தமிழ் மக்கள் எதிர்நோக்கி பிரச்சினைகளை தொடர்ச்சியாக சிங்கள மக்களிடமிருந்து மூடிமறைத்து வந்ததாகக் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் இன்மையே பிரச்சினைகளுக்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும், நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டுமென கூட்டமொன்றில் தாம் குறிப்பிட்டதாகவும், அவ்வாறு குறிப்பிட்டால் நாம் வாக்குகளை இழக்க நேரிடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தம்மிடம் கூறியதாகவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென அரசியல் மேடைகளை தெரிவித்த தமக்கு தேர்தல்களில் பாரியளவு வெற்றி கிட்டியதாகவும், சிங்கள மக்கள் அதிகாரப் பகிர்வினை எதிர்க்கவில்லை என்பதற்கு இதுவே சான்று எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அரசாங்கம் வடக்கு மக்களுக்கு போதியளவு சேவைகளை ஆற்றவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்கியிருப்பதாகவும், ஏன் அவர்கள் இன்னமும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இராணுவத்தினரின் பிரசன்னம் அவசியம் என்பதனை ஒப்புக் கொள்வதாகவும், யுத்தம் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் பாரியளவில் படையினரை குவிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் அமைதியானவர்கள், அனைத்து தமிழர்களையும் பயங்கரவாதிகளாக கருத முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
இதுவரையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் பெரும்பான்மையான சிஙகள மக்களுக்கு தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் லாப நோக்கங்களுக்காக இனப்பிரச்சினையை அரசியல்வாதிகள் தூண்டி விடுவதாகவும், தமிழ் மக்கள் எதிர்நோக்கி பிரச்சினைகளை தொடர்ச்சியாக சிங்கள மக்களிடமிருந்து மூடிமறைத்து வந்ததாகக் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் இன்மையே பிரச்சினைகளுக்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களுக்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும், நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டுமென கூட்டமொன்றில் தாம் குறிப்பிட்டதாகவும், அவ்வாறு குறிப்பிட்டால் நாம் வாக்குகளை இழக்க நேரிடும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தம்மிடம் கூறியதாகவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென அரசியல் மேடைகளை தெரிவித்த தமக்கு தேர்தல்களில் பாரியளவு வெற்றி கிட்டியதாகவும், சிங்கள மக்கள் அதிகாரப் பகிர்வினை எதிர்க்கவில்லை என்பதற்கு இதுவே சான்று எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அரசாங்கம் வடக்கு மக்களுக்கு போதியளவு சேவைகளை ஆற்றவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்கியிருப்பதாகவும், ஏன் அவர்கள் இன்னமும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இராணுவத்தினரின் பிரசன்னம் அவசியம் என்பதனை ஒப்புக் கொள்வதாகவும், யுத்தம் நிறைவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் பாரியளவில் படையினரை குவிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் அமைதியானவர்கள், அனைத்து தமிழர்களையும் பயங்கரவாதிகளாக கருத முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மற்றொரு கண்டம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கை மீது அனைத்துலக கவனம் திரும்பும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், உலக நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை பற்றிய மீளாய்வு இடம்பெறவுள்ளது. இந்த மீளாய்வில் இலங்கை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும்.
இந்தநிலையில், இலங்கை தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்க ஐ.நாவின் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசசார்பற்ற அமைப்புகளுக்கு ஏப்ரல் 23ஆம் திகதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு இலங்கைக்கு எதிர்வரும் ஜுலை 23ஆம் திகதி வரை காலஅவகாசம் அளிக்கப்படும். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நவம்பர் திகதி இலங்கை தொடர்பான மீளாய்வு விவாதம் நடத்தப்படவுள்ளது.
இதற்கு முன்னதாக அனைத்துலக பணிகள் தொடர்பான மீளாய்வை இலங்கை மேற்கொள்ளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜுன் மற்றும் செப்டோம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில், முன்னேற்றங்கள் தொடர்பாக தாம் அறியப்படுத்தவுள்ளதாக இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்
இந்தநிலையில், இலங்கை தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிக்க ஐ.நாவின் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசசார்பற்ற அமைப்புகளுக்கு ஏப்ரல் 23ஆம் திகதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு இலங்கைக்கு எதிர்வரும் ஜுலை 23ஆம் திகதி வரை காலஅவகாசம் அளிக்கப்படும். ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நவம்பர் திகதி இலங்கை தொடர்பான மீளாய்வு விவாதம் நடத்தப்படவுள்ளது.
இதற்கு முன்னதாக அனைத்துலக பணிகள் தொடர்பான மீளாய்வை இலங்கை மேற்கொள்ளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜுன் மற்றும் செப்டோம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில், முன்னேற்றங்கள் தொடர்பாக தாம் அறியப்படுத்தவுள்ளதாக இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்
Subscribe to:
Posts (Atom)









